Saturday, January 17, 2009

ஆகாசவாணி




அந்த ஒற்றைத்தாளில் தெரிந்த
அந்தரக்கிழிசலின் தையலைக்கிழித்து
நூல்களாய் துளிகள் கொட்டித்தீர்க்க
கிடைத்த மிச்சக்கடலில்
பயணம் போகும்
அந்தக்கப்பலை
நனைக்க விரும்பாமல்
நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் அழகில்
தெரிந்து கொண்டேன்
காட்சியிலும் கவிதையிருப்பதை

0 comments:

Post a Comment